இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Friday, August 10, 2012

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மாநாடும் - மணிச்சுடர் நாளிதழும்



                 மௌலானா தளபதி.ஏ.ஷபீகுர் ரஹ்மான் 
                                                                துணைத் தலைவர்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ் நாடு


அல்லாஹுத்தஆலாவின்அருள் பூத்துக் குலுங்கும் இப்புனித ரமளான் மாதத்தில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில்  திருக்குர்ஆன்  ஷரீஃபை தஜ்வீது சட்டப்படி முறையாக இனியக் குரலில் ஓதும் காரிகளைக் கொண்டு ஓதப்படுகிறது.
வள்ளல் நபிகள் பெருமானார் ரசூல் ( ஸல் ) அவர்களின் மூலம் மனித சமுதாயத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் விஞ்ஞான உலகிலும் அற்புத சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது  திருக்குர்ஆன் ஷரீஃப் அருளப்பட்ட புனிதமிகு மக்காவிலும் மாண்புமிகு மதீனாவிலும் இன்றும் லட்சக்கணக்கான தீனோர்கள் குர்ஆன்  ஷரீஃபை ஓதும் காட்சி கண்ணுக்கும் கல்புக்கும் ஒளிபெற்று மகிழ்ச்சியைத் தருகின்றது .

மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத்  அவர்கள் திருக்குர்ஆன் ரீஃபின் மகத்துவத்தை மணிச்சுடர் நாளிதழில் எழுதி மகிழ்ந்துள்ளார்கள் .
 இன்றும் மணிச்சுடர் நாளிதழில்  ஒவ்வொரு நாளும் திருக்குர்ஆனின் வசனம் பற்றிய விளக்கவுரை தொடர்ந்து வெளியிடப்படுகிறது .
 ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து  16 ஆண்டுகளாக நடைபெற்று  வரும் துபாய் சர்வதேச  திருக்குர்ஆன் மாநாட்டினைப் பற்றியும் அதன் இனிய நிகழ்வுகள் பற்றியும் மணிச்சுடரில் செய்தி வெளியிட்டதோடு  மட்டுமில்லாமல் முந்தைய ஆண்டுகளில் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியரும் 
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்  அவர்கள் துபாய் சர்வதேச  திருக்குர்ஆன் மனனப் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்று  மணிச்சுடர் நாளிதழிலும்  சர்வதேச திருக்குர்ஆன் மாநாடுப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்கள்.

மணிச்சுடரின் செய்திகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வந்தமைக்காக இவ்வாண்டு சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டு குழு மணிச்சுடர் நாளிதழுக்கு விருதினை அளித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவரும் மணிச்சுடர்  இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இடம் பெற்றுள்ள சோழ நாட்டின் சமுதாயச் செம்மல் குத்தாலம் லியாகத் அலி அவர்கள் மணிச்சுடருக்கான இவ்விருதைப் பெற்றிருப்பது மணிச்சுடர் வெள்ளி விழா ஆண்டின் மகிழத்தக்க செய்தியாகும். 
 இவ்விருது திருக்குர்ஆன் ரீஃபின் மகிமைப் பற்றி இனிக்க இனிக்க இன்பத்தமிழில் மணிச்சுடர்  நாளிதழில் எழுதி வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்களுக்கு கிடைத்த பரிசாகும்.  
 திருக்குர்ஆன் ரீஃபின் பெயரால் தாருல்குர்ஆன் பத்திரிகை நடத்தி  திருக்குர்ஆனின் மகத்துவம் பற்றி மணிச்சுடர் நாளிதழில் எழுதி நாடெல்லாம் நாள் தோறும் திருக்குர்ஆன் மாண்புகள் பற்றி பேசியும்,எழுதியும் வரும் நம் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் தியாக மிகுந்த சேவைக்கு கிடைத்த பரிசாகும்.
 
25 அண்டுகளுக்கு முன்னர் புனித ரமளானில் நம் மணிச்சுடர் நாளிதழுக்காக அதன் கௌரவ பிரதிநிதியாக அமீரகத்தில் தமிழகத்தின் இளைஞர்கள் பணியாற்றிய பகுதியெல்லாம் சுற்றி சுற்றி மணிச்சுடருக்காக சந்தாக்கள் சேர்த்து தொண்டாற்றிய,இன்றும் தொண்டாற்றி வரும் இன்ஷா அல்லாஹ் என்றும்  தொண்டாற்ற இருக்கின்ற தொண்டன் என்ற அடிப்படையில் மணிச்சுடருக்கு கிடைத்த விருதுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்தை தெரிவிப்பத்தில் மகிழ்கிறேன்.  அல்ஹம்துலில்லாஹ் ......
 

Monday, June 11, 2012

சீறியெழும் சிறுத்தையாக விளங்கிய – இன்றைய ஷபீகுர் ரஹ்மான்


லால்பேட்டையில் முதல் முஸ்லிம் லீக் மாநாடு……
/
  • லால்பேட்டை பெருமக்களை வரலாற்றில் பதிய வைத்ததை பெருமை படுத்தும் விதத்தில் கண்ணியத்திற்குரிகாயிதேமில்லத் அவர்களின் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்…
/
1958 ஜுன் மாதம் 6-7 தேதிகளில் தென்னாற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாடு, சிதம்பரம் காட்டுமன்னார்குடி பிரதான சாலையின் அருகில் அமைந்திருந்த புதுநகர் என்றும்,தெற்குத் தோப்பு என்றும் சொல்லப்படும் தோப்பில் நடைபெற்றது.
/
காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்,லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியுமான மவ்லானா எஸ்.ஏ.அப்துல் பாஸித் சாஹிப் முன்னிலை வகித்தார்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வர் ஷைகுல் மில்லத் அல்லாமா ஜியாவுத்தீன் அஹமத் அமானீ ஹஸரத் அவர்கள்,துஆ ஓதி மாநாடின் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
/
சிறந்த செயலாளராகாத் திகழ்ந்த லால்பேட்டை மவ்லானா முஹம்மது சுல்தான் பாகவி அவர்கள் முறைப்படி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.மவ்லானா எஸ்.எம்.அப்துல் ஜப்பார் பாகவி மாநாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
/
மாநாடு நடைபெற்ற தீரர் திப்பு நகர் திடலின் முகப்பில்,சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது,பிரமாண்டமான அணிவகுப்புடன் முஸ்லிம் லீக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.ஜமாலி சாஹிப் அவர்கள்-
முஸ்லிம்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப – விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.மற்றும் அரசின் அனைத்துத்துறைகளிலும் முஸ்லிம்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்;அதே போல், சட்ட மன்றம், நாடாளுமன்ற அவைகளிலும் முஸ்லிம்களுடைய எண்ணிக்கைக்கேற்ப உண்மையான பிரதிநிதிகள் இடம் பெறத்தக்க வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசு துரிதமாகச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.
/
தீர்மானத்தை வழி மொழிந்து தென்ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் கன்வீனர் தா.சயீத் சாஹிப் பேச,மக்கள் தக்பீர் முழங்கித் தீர்மானம் நிறைவேறச் செய்தனர்.
/
மாநில பொதுச்செயலாளர் ஜனாப்.கே.டி.எம்.அஹமது இப்ராஹீம் சாஹிப் பி.ஏ.பி.எல்.,கேரளச்சிங்கம் சி.எச்.முஹம்மது கோயா சாஹிப்,சேலம் டி.அப்துல் பாசித் சாஹிப்,தளபதி திருப்பூர் ஏ.எம்.மொய்தீன்,மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் ஏ.எம்.யுசுப்,சிந்தனைச்செல்வர் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமது,வடகரை எம்.எம்.பக்கர்,கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாஹிப்,மவ்லவி முஹம்மது ஆதம் பாகவி,மவ்லானா அப்துல் பஷீர்,மதுரை மவ்லவி எஸ்.இ.முஹம்மது அலி நுரி ஆகியோர் உரையாற்றினார்.
/
இந்த மாநாடு நடக்கும்போது பனிரெண்டு வயது எய்திய சிறுவராக இருந்த இன்றைய மவ்லவி தளபதி ஷபீகுர்ரஹ்மான் இந்த மாநாட்டில் முதன் முதலில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
/
மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பு சேர்த்த பெருமைக்குரியவர்களாக ஜனாப் டி.ஏ.அப்துல் ஹலீம் சாஹிப் அவர்கள் தலைமையில் அமைந்த வரவேற்பு குழுவினர் விளங்குகிறார்கள்.இக்குழுவில்
/
ஷைகுல் மில்லத் அமானி ஹஸ்ரத்,முத்தவல்லி அப்துல் பாசித்,ஏ.பி.அப்துல் வஹாப்,மவ்லவி அப்துல் ஜப்பார்,மவ்லவி முஹம்மது சுல்தான்,எஸ்.எஸ்.நூர் ஹாஜியார்,மவ்லவி அப்துல் ஹக்,மவ்லவி முஹம்மது இக்லீல்,ஏ.எம்.அப்துல் மஜீத்,கே.எஸ்.அப்துல் கபூர்,ஏ.கே.அப்துல் மஜீத்,எஸ்.ஏ.பீர் முஹம்மது,மவ்லவி எம்.எஸ்.அப்துல் ஹக்கீம்,கத்தீப் கே.ஜி.அப்துல் ஜப்பார்,டி.ஏ.அப்துல் ஜப்பார்,ஆயங்குடி மவ்லானா அப்துல் ஜப்பார்,கொள்ளுமேடு என்.முஹம்மது அலி,கோட்டகுப்பம் டி.பி.முஹம்மது இஸ்மாயில்,மங்கலம்பேட்டை அப்துல் வாஹித் ஹஸ்ரத்,ஆயங்குடி அப்துல் குத்தூஸ்,விழுப்புரம் முஹம்மது இஸ்மாயில்,காட்டுமன்னார்குடி சந்தா சாஹிப்,பரங்கிப்பேட்டை டி.ஜெய்னுலாப்தீன் மரைக்காயர்,நெல்லிக்குப்பம் மவ்லவி முஹம்மது யாசீன்,முஹம்மது பாக்கவி,முஹம்மது லெப்பை.
இறுதியாக காயிதேமில்லத் அவர்கள்,நாட்டின் அரசியல் நிலவரம்,சமுதாயம் பேணிப் பின்பற்ற வேண்டிய ஒற்றுமை,கட்டுப்பாடு மற்றும் முஸ்லிம்லீக் செயல்பாடுகள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
/
சிறுவர் முஸ்லிம் லீக் மாநாடு
/
1958 ஆகஸ்ட் 8 ஆம் தேதி லால்பேட்டை நகரில்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லுஉரி பின்புறம் அமைந்திருந்த திடலில் தென்னாற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் சிறுவர்கள் மாநாடு நடைபெற்றது. சிறுவர்கள் சார்ந்த இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர்,அன்றைய பனிரெண்டு வயது எய்தப் பெற்ற துடிப்பும்,துணிச்சலும் மிக்க சிறுவராக விளங்கிய – இன்றைய தளபதி – மவ்லவி ஷபீகுர் ரஹ்மான் என்றால் அனைவரும் வியக்கவே செய்வார்கள்.
/
ஆனால் உண்மை தான், அன்று சிறுவர் சம்மந்தப்பட்ட அந்த சிறப்பான மாநாட்டின் தலைமை ஆசனத்தை அலங்கரித்தவர் அன்றைய – சீறியெழும் சிறுத்தையாக விளங்கிய – இன்றைய ஷபீகுர் ரஹ்மான் ஹஸ்ரத் தான்!
/
அன்று,மூத்த முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராக இருந்த மவ்லானா பி.எம்.முஹம்மது சுல்தான் சாஹிப் அவர்களின் அன்புச்செல்வர் பி.எம்.முஹம்மது தாவூஸ் வரவேற்று பேசினார்.த.எஸ்.முஹம்மது அலி முஸ்லிம் லீக் கொடியேற்றினார்.
எஸ்.முஹம்மது இப்ராஹீம்,எஸ்.எஸ்.அபுல் ஹசன்,ஆயங்குடி அப்துல் ரஷீத்,ஷேக் பரீத் ஆகியோர் உரை நிகழ்த்தினர் அனைவருமே சிறுவர்கள் தான்.
/
இதைத்தொடர்ந்து ஆயங்குடியிலும் சிறுவர்கள் மாநாடு சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் நடத்திய மாநாடுகளுக்கு ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹஸ்ரத்,மவ்லவி அப்துல் ஹக்,மவ்லவி முஹம்மது இக்லீல்,டி.எம்.அப்துல் ஹலீம்,ஏ.கே.அப்துல் மஜீத்,முத்தவல்லி மவ்லவி அப்துல் பாசித் முதலான மூத்த தலைவர்கள் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி,சிறுவர்களை ஊக்குவித்தார்கள்.
/
(எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய முஸ்லிம் லீக் நுற்றாண்டு வரலாறு 1948-1972 இரண்டாம் பாகம் நூலிலிருந்து…)

Sunday, March 25, 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றுத்தந்தது தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றி விழா மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உணர்ச்சி உரை

முஸ்லிம்களுக்கான உரிமைகள் அனைத்திற்கும் அரசியல் சட்டப் பாதுகாப்பு கேடயத்தை பெற்றுத் தந்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய கடமை சமுதாயத் தைச் சார்ந்தது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

சென்னை எழும்பூர் இம் பீரியல் ஹோட்டல் சிராஜ் அரங்கத்தில் மார்ச் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் தலைவர் பேராசிரியர் ஆற்றிய உணர்ச்சி உரை வருமாறு-

Saturday, February 11, 2012

இலங்கை பயணம் மேற்கொண்ட தலைவர் பேரா.காதர் மொகிதீன்-தளபதி ஆகியோர் அமைச்சர் ரஊஃப் ஹக்கீமுடன் சந்திப்பு:

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாத் விழாவில் பங்கேற்றுவிட்டு கொழும்பு சென்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,துணைத் தலைவர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆகியோருக்கு இலங்கை அமைச்சர் வரவேற்பு:



பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வருகையை தமிழ்த்தென்றல் அல்ஹாஜ் அலீ அக்பர் மூலம் அறிந்துகொண்ட இலங்கை நீதியமைச்சர் ரஊஃப் ஹக்கீம், மறுநாள் 08.02.2012 அன்று காலையிலேயே அவர்களின் தங்குமிடம் வந்து, பேராசிரியரையும், தளபதியையும் இலங்கை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். 

Sunday, January 29, 2012

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் மீலாத் விழாக்களில் பங்கேற்று சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் சென்ற முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர்ரஹ்மான் மன்பஈ 
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் மாபெரும் ஷரிஅத் போராட்ட மாவிரராகும் 
நாமெல்லாம் புனித மஸ்ஜித்களிலும் சமுதாய மேடைகளிலும் வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அழகார்ந்த அன்பார்ந்த தூய்மையான வாழ்வைப்பற்றி வாய் இனிக்க பேசி மகிழ்கிறோம் 
நம்முடையத் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்கள் பற்றியும் புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டங்களின் மகத்துவம் பற்றியும் மஸ்ஜித்களிலும்,மதரஸாக்களிலும் , சமுதாய மேடைகளிலும் சிறப்புரையாற்றியதோடு 
மாராட்டிய மாநில சட்டமன்றத்திலும் ,நாடாளுமன்ற மக்களவையிலும்  புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டம் பற்றியும் மணி மணியாய் மணிக்கணக்கில் நம் நாட்டின் பிரதமர்,மத்திய அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுமே வியக்க தக்க அளவில் இஸ்லாமிய சட்டவியல் பற்றி உரையாற்றியுள்ளார் 
ஷாபானு வழக்கு பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் ஷரிஅத் சட்டம் மனித சமுதாயத்துக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு உரிமைப் பற்றியும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கு  இஸ்லாமிய  ஷரிஅத் வழங்கியுள்ள உரிமைப்பற்றியும், சிறப்புப்பற்றியும் உலக சமுதாயத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார் .
நம் உயிரினும் மேலான உத்தமத்தலைவர் நபிகள் பெருமானார் அவர்களின் அழகிய வழிகாட்டுதலால் மனித சமுதாயத்துக்கும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கும் கிடைத்துள்ள சிறப்புப்பற்றி நாடாளுமன்றத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக விளக்கவுரை - தெளிவுரை நிகழ்த்தியதை நம் நாட்டு பிரதமர் மறைந்த மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்த செய்தி சரித்திரச்செய்தியாகும் இதை தமிழகத்தின் மேடைகள் எங்கும் நம் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் சொல்லிக்காட்டியச் செய்தி மறக்க முடியாத நிகழ்வாகும் .
2004 ஆம்  ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நம் தலைவர் முனிருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்களுடன் அடியேனும்  நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தில்  பனாத்வாலா சாஹிப் அவர்கள் எம்.பி.யாக பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற  கூட்டம் நடைப்பெற்ற காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றியும் , ஷரிஅத் பற்றி - வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்வியல் பற்றி  நாடாளுமன்றத்தில் பேசியுள்ளச் செய்தியை நெஞ்சுருக குறிப்பிட்டார்கள் .
நாடாளுமன்றம் கூடியக் காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பதிவுச் செய்துள்ள பனாத்வாலா சாஹிப் அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டினார் .
2008  ஆம் ஆண்டில் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் ரப்பிவுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஒவ்வொரு நாளும் வள்ளல் நபிகள் நாயகம் பெருமானார் அவர்களின் பிறந்த தின விழாவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் செய்யத் முஹமத் ஹாஜியார் நடத்திக் கொண்டிருந்தார் விழாவின் துவக்க நாளன்று தலைவர் பேராசிரியர் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்று துவக்கவுரையற்றிய முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களின் உரை இன்றும் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது .
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடுகள் ,பொதுக் கூட்டங்கள் ,பள்ளிவாசல் திறப்பு விழாக்கள்  ஷரிஅத் மாநாடுகள் ,அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாக்கள் ஆகியவற்றில் அதிகமாக பங்கேற்றுள்ளார் .திருச்சி மாநகரில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட  மீலாத் விழா மாநாடு ,ஊர்வலத்தில் பங்கேற்று உரையாற்றி சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்துள்ளார் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் ,சேலம் மாநகரிலும்  மீலாத் விழாக்களில் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தி சமுதாயத்தை சரியான பாதையில் எழுச்சி பெறச் செய்துள்ளார் .கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் .நகர  முஸ்லிம் லீக் சார்பில் அன்னை கதீஜா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற மீலாத் விழாவில் கலந்துக்கொண்டு வள்ளல் நபியின் தூய்மையான வாழ்வில் அற்புத சேவையாற்றியுள்ள அன்னை கதீஜா நாயகி அவர்களின் பெயரைப்பெற்றுள்ள மகளிர் பள்ளியின் வளாகத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்வடைகிறேன் என்று  பனாத்வாலா  சாஹிப் நிகழ்த்திய உரை அனைவரையும்  நெகிழ வைத்தது 
ஆசிக்கே ரசூல் பனாத்வாலா சாஹிப் அவர்கள் .
அடியேன் மாண்புமிகு மதீனாவில் பணியாற்றிய காலத்தில் மும்பை வழியாக அடியேன் பயணம் செல்லும் காலமெல்லாம் மும்பையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்று பயணம் சொல்லி போகும் போதெல்லாம் நபிகள் பெருமானார் ரசூல்(ஸல்) அவர்களின் தர்பாரில் என் ஸலாம் சொல்லுங்கள் என்று ஸலாம் சொல்லி சலவாத்து ஓதி மகிழ்வார் அதை நினைக்கும் போதெல்லாம் இன்னமும் எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன் .
இவரின் சேவையை அங்கீகரித்து கப்ரில் பிரகாசத்தை வழங்கி சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை கருணையுள்ள ரஹ்மான் வழங்குவானாக !

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் மீலாத் விழாவை நாடெங்கும் நடத்தி மகிழ்வோம்


மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ 
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள்  பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை நாடெங்கும் நடத்தி நற்குணத்தின் தாயகம் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அழகார்ந்த அன்பார்ந்த வாழ்வைப்பற்றி நாட்டு மக்களிடையே சுட்டிக்காட்டுவதும் சொல்லிக்காட்டுவதும் நமது கடமையாகும் 
இருளைப்பார்த்து இருளே போ-போ- என்று கோஷம் போடுவதை விட அங்கு ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய்விடும் அந்த வகையில் நபிகள்  பெருமானார் அவர்களின் நற்குணங்கள் ,அழகான உபதேசங்கள் பற்றி உரையாற்றுவதால்  மக்கள் சமுதாயத்தில் மனித நேயத்தையும் ,மத நல்லிணக்கத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது .
75 ஆண்டுகளுக்கு முன்னர் மீலாத் விழா நடத்தலாமா வேண்டாமா ? என்ற கருத்துப்பரிமாற்றங்கள் வாத விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்ற போது  வள்ளல் நபிகள்  பெருமானார் அவர்களின் பிறந்த தின விழாவை நடத்தி நாட்டு மக்களிடையே இஸ்லாமிய மார்க்க உணர்வை ஊட்டுவது மேலும்  வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களைப்பற்றி அவர்களின் அறிவார்ந்த கருத்துக்களைப்பற்றி பேசுவதால் மீலாத் நடத்தும் பகுதியும் நிலமும் வளம் பெறுகிறது மீலாத் விழா நடத்துபவர்கள் வாழ்வும் வளம் பெறுகிறது என்று தென்னகத்தின் தாய்க்கல்லூரி வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியின் முதல்வர் ஷரியத்தின் சட்டவியல் மேதை அல்லாமா ஷெய்கு ஆதம் ஹஜ்ரத் ,சிறப்புமிகு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கலூரியின் முதல்வர் அறிவுலக மேதை அமானி  ஹஜ்ரத்,புகழ்மிகு நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கலூரியின் முதல்வர் மௌலானா முஹமத் இப்ராஹிம்  ஹஜ்ரத் ,பன்னூல் ஆசிரியர்கள்  உத்தமபாளையம் மௌலானா முஹமத் அப்துல் காதர்  ஹஜ்ரத் ,பி.எஸ்.கே.முஹமத் இப்ராஹிம்  ஹஜ்ரத்,தியாகச்செம்மல் திருநெல்வேலி மௌலானா அபுல்ஹசன் ஷாதலி  ஹஜ்ரத் மற்றும் ஏராளமான மூத்த உலமாக்கள் மீலாத் விழா நடத்துவதன் அவசியம் பற்றி நாடெங்கும் உரையாற்றியுள்ளார்கள் .
ஊர் ஊரக சுற்றி உத்தம நபிகள் பெருமானார் அவர்களைப்பற்றி உரையாற்றி இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியை சுற்றியுள்ள வட ஆற்காடு மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும்  பெருமானார் அவர்களின் பிறந்த மாதமான ரபிவுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் பிறை 12 வரை  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கலூரியில் பணியாற்றிய தலைச்சிறந்த பேராசிரியர்களை அழைத்து மீலாத் விழாக்கள் சிறப்புடன் நடைப்பெற்றது 
லால்பேட்டை ஜெ.எம்.ஏ .அரபிக்கலூரியை சுற்றியுள்ள தென்னாற்காடு மாவட்டத்திலும் ,நீடூர் ஜெ.எம்.ஹெச்.அரபிக்கலூரியை சுற்றியுள்ள தஞ்சை மாவட்டத்திலும்  தலைச்சிறந்த உலமாக்களை அழைத்து தொடர் சொற்பொழிவு நடத்தி மீலாத் விழா நடத்தப்பட்டது .
மீலாத் விழாக்கள் நடத்திய காலமெல்லாம் எங்கும் அன்பும் அமைதியும் நிலவியது ,மீலாத் மாநாடுகளில் பொது மேடைகளில் நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி ,அவர்களின் அழகிய முன்மாதிரியை பற்றி பேசியதால் நாட்டு மக்களிடையே ,இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே நல்ல இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டது இதையொட்டியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளிலெல்லாம் மீலாத் விழா நடத்தி- உரையாற்றி - சமுதாய - சன்மார்க்க எழுச்சியை உருவாக்கினார்கள் 
கண்ணியமிகு காயிதேமில்லத் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்கள் நாடெங்கும் நடைப்பெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று அறிவார்ந்த உரையாற்றியுள்ளர்கள் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1971 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற  மீலாத் விழாவில் உரையாற்றியபோது .
பெருமானார்  ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வைப்பற்றி பேசுவதால் - பேணிப்பின்பற்றுவதால் நாமும் பரிசுத்தம் பெறுகிறோம் நாங்களெல்லாம் சின்னச்சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் ஊரான திருநெல்வேலிபேட்டையில் வருடந்தோறும் மீலாத் தொடர் சொற்பொழிவு நடைபெறும் அப்போது மிகச்சிறந்த உலமாக்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள் வானமும் இடிந்து விடலாம் பூமியும் பிளந்து விடலாம் அல்லாஹுத்தஆலாவின்  சொல்லும் ரசூல் கறீம்(ஸல்) அவர்களின் சொல்லும் பொய் ஆகாது என்று கூறியதை காயிதே மில்லத் அவர்கள் உரையில் குறிப்பிட்டதை கேட்டு நெஞ்சம் நெகிழ்கிறேன் அவ்விழாவில் அடியேனும் கலந்துக்கொண்டு உரையாற்றினேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் இச்செய்தியை அறமுரசு நாளிதழிலும் காயிதேமில்லத் அவர்களின் அதிராம்பட்டினம் மீலாத் விழா உரையை எழுதி பதிவுச் செய்துள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பணியாற்றிய சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தமிழகமெங்கும் நடைப்பெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று  வள்ளல் நபிகள்  பெருமானார் அவர்களின் வாழ்வைப்பற்றி சந்தனத் தமிழில் உரையாற்றியச்செய்தி மறக்க முடியாத செய்தியாகும் .
நாவலர் யூசுப் சாஹிப் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளராக பணியாற்றிய மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப் சாஹிப் அவர்கள் பட்டி தொட்டியல்லாம் நடைபெற்ற மீலாத் விழாக்களில் பங்கேற்று நாள்தோறும் 2 மணிநேரம், 3 மணிநேரம் எழுச்சி உரையற்றிய செய்தி சரித்திர செய்தியாகும்.
முனீருல்  மில்லத் பேராசிரியர் 
நம் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தன் இளம் வயதிலிருந்து தமிழகம் ,அரபகம் ,அமீரகம் ,சீனா ,தாய்லாந்த் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் மீலாத் விழாக்களில்  பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார் .
நம் உயிரினும் மேலான உத்தம நபிகள் பெருமானார் ரசூல் கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாவை நாடெங்கும்,ஊரெங்கும் நடத்தி அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் பூத்துக் குலுங்கச்செய்வோம் வாரீர்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்வைப்பேணி பின்பற்றி வாழ்ந்து வெற்றியாளர்களாக திகழ நம் அனைவர்களுக்கும் கருணையுள்ள ரஹ்மான் அருள் புரிவானாக !