இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Saturday, June 18, 2011

தளபதி ஷஃபிகுர் ரஹ்மான் அவர்களுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கப்பட்​டது

திருச்சி,ஜுன்,18
பொது வாழ்வில் பொன் விழா கன்ட தளபதி ஷஃபிகுர் ரஹ்மான் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 116 வது பிறந்தநாள் நினைவாக இன்று 18 .06 .2011 திருச்சியில் நடைப் பெற்றவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களால் காயிதெ மில்லத் விருது வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கினைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் ,அனைத்து மாவட்ட தலைவர்,செயலாளர் மற்றும் சமுதாய பிரமுகர்கள் ஜமாத்துக்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தளபதிக்கு விருது வழங்கும் விழா-அது சமுதாய மாந்தருக்கு திருவிழா,

கண் விழித்து-கருத்தறிந்த காலம் தொட்டு,

லீக்கின் கொடியை தூக்கிப் பிடித்து

நாக்கில் தக்பீர் நாதம் உரைத்து-இறை வாக்கின் வழியில் வாழக்கற்று

முஸ்லிம் லீக்கெனும் முதுபெரும் இயக்கத்தின் தொண்டனாய்-

தலைவனாய் துலங்கி நிற்கும்-எங்கள் தோழரே! தளபதியே!

இன்று காயிதெமில்லத் விருது பெறும் தங்களை இதயத்தால் வாழ்த்தி
பன்னலம் கொண்டு பல்லாண்டு வாழ்ந்து

ஈமானின் சுடரோடு என்றும் ஒளிர்ந்துசீமான் தனத்தோடு சிறப்புகள் பெற்று
வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறோம்.

கவிஞர்-ஏ.எம்.முஹிப்புல்லாஹ் ஜித்தா.