இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

கொங்கு மண்டலத்தில் நடைப்பெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வெற்றிச் செய்திகளை நாள் தோறும் கேட்டு மகிழ்கிறோம் முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைப்பெற இருக்கும் இந்த சிறப்பான உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்று உலகில் இது வரையில் யாரும் மாநாடு நடத்தவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சொல்லிக்காட்டி இருப்பது சரியான செய்தியாகும்.


உலகெங்குமிருந்தும் அறிஞர் பெருமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரபு நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ப்பத்தின் மூலம் தமிழகத்துக்கும் -அரபகத்துக்குமுள்ள நெருக்கத்தையும் நேசத்தையும் காட்டுகிறது நம் நாட்டு அரசியல் நிர்ணயச் சபையில் என் தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்குங்கள் .

Tuesday, June 15, 2010

லால்பேட்டையில் தலைவர் பேராசிரியருக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் மாவட்டம் லால்பேட்டை வருகை தந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுககு நகரெங்கும் உறசாக வரவேற்பளிககபபடடது.


சிதம்பரம் ரயில் நிலை யத்தில் அதிகாலை 4 மணிக்கு லால்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர் மவ்லவி ஏ. நூருல் அமீன்,மாணவரணி அமைப்பாளர் சல்மான பாரிஸ், ஏ.எஸ்.அஹமது உள்ளிட்ட இயக்க முன்னோடிகள் தலைவருக்கு வரவேற்பளித்தனர்.


காலை 10 மணிக்கு லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை தலைவர் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து லால்பேட்டை நகரின் பல்வேறு இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை ஏற்றி வைத்தார்.

Monday, June 7, 2010

காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!


காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!


கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் பங்கேற்க்க வந்த தமிழக முதல்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயளாலரும் தமிழக தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொய்தீன்,மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,சட்ட மன்ற உறுப்பினர் ஹெச்.அப்துல் பாஸித்,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக முதல்வர் மலர் போர்வை போர்த்திய உடன் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயளாலர் தளபதி மெளலவி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

இநிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர் திரு தயாநிதி மாறன்,தமிழக செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம் வழுதி,விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்,சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள்,மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.