இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Sunday, November 8, 2009

.அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.
தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.
அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.
முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.
முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
-

Saturday, November 7, 2009

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்



கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் அக்டோபர் 18 ஞாயிற் றுக்கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர்.

லால்பேட்டை சிதம் பரம் மெயின் ரோட்டில் சிராஜுல் மில்லத் நினை வரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.ஜி. முஹம்மது தலைமை தாங்கினார். இளைஞரணி துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார். கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ. அமானுல்லா வரவேற்று பேசினார்.

மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கபார் துவக்கவுரை நிகழ்த்தினார். நகர ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள், முத்தவல்லி கள் முன்னிலை வகித்தனர். மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத் ஜான், மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், திருவாரூர் மாவட் டச் செயலாளர் எம்.எம். ஜலாலுதீன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

லால்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் சல்மான் பாரிஸ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பிரைமரி களின் நிர்வாகிகள், இளை ஞர் அணியினர், ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள் ஏராளமானோர் பங்கேற்ற னர்.

உலமாக்கள் சந்திப்பு
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ், மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹஸரத், கட லூர் மாவட்ட ஜமாஅத் துல் உலமா சபை தலைவ ரும், லால்பேட்டை ஜே. எம்.ஏ. அரபிக் கல்லூரி முதல்வருமான மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹஸரத், நெல்லிக்குப்பம் மவ்லானா அப்துல் ரஸாக், மலேசிய பினாங்கு மதரஸாவின் பேராசிரியர் மவ்லானா ஹம்மாது மதனி, மவ் லானா சையத் அஹமது, மவ்லானா நூருல் அமீன், மவ்லானா அபுல் கலாம் உள்ளிட்ட உலமா பெரு மக்களை மாநில பொதுச் செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பி னரும் சந்தித்து பேசினர்.

கொடியேற்று விழா
லால்பேட்டை நகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் அருகிலும், புது பஜார், காயிதெ மில்லத் சாலை, ஏரிக்கரை மெயின் ரோடு, பஸ் நிலையம் அருகில், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபு பக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஏ.ஆர். அப்துர் ரஷீத் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செய லாளர்கள் லால்பேட்டை அமானுல்லா, விருத்தா சலம் லியாகத் அலி, நெல் லிக்குப்பம் ராஜா ரஹி முல்லா, மங்களம் பேட்டை அப்துல் ரஹ் மான், லால்பேட்டை நகர துணைத் தலைவர் எம்.ஓ. அப்துல் அலி, பி.எம். முஹம்மது தயீப், பி.எம். மஸ்ஊது, காட்டுமன்னார் குடி முஹம்மது கவுஸ், விருத்தாசலம் அப்துல் மஜீத் உள்ளிட்ட ஏராமா னோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இமாம் கஸ்ஸாலி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
லால்பேட்டை வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந் நகரில் உள்ள இமாம் கஸ்ஸாலி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

லால்பேட்டை லால் கான் தோப்பு கல்வி வளா கத்தில் ஏ.ஆர். பஸ{லுத்தீன் நினைவரங்கில் நடை பெற்ற இவ் விழாவிற்கு நகர முஸ்லிம் பட்டதாரி கள் சங்கத்தின் தலைவர் எஸ். எஸ். ஜாபர் அலி தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் ஹாரிஸ் அஹமது ஆண்டறிக்கை வாசித்தார்.

மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், கவிஞர் பி.எம். நசீர் அஹமது, எம்.ஏ. ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.எ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகி யோர் சிறப்புரையாற்றி னர். பள்ளி முதல்வர் மாரியப் பன் நன்றி கூறினார்.

மாவட்ட முஸ்லிம் லீக் கலந்துரையாடல்
லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் கடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் கூட் டம் முடிந்த பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எச். முஹம்மது ஆஸிப் இல் லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை ஜே.எம்.ஏ. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஏ. அப் துல் அஹது இல்லத்திற்கு சென்று காலம் சென்ற அவரது மாமியாரின் மஃபி ரத்துக்கு துஆ செய்தனர்.

முன்னதாக, லால் பேட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துல் ரஹ் மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் ஆகியோருக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


காயிதெ மில்லத் நினைவிடத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உருக்கம்



இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத்துடன் என்னுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்தே தொண்ட னாக பணியாற்றி இருக்கி றேன். காயிதெ மில்லத்தால் ஹதளபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டேன்.

காயிதெ மில்லத் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, லால் பேட்டை நகர முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் தா. அப்துல் ஹலீமுடன் காயிதெ மில்லத்தை பார்க்க சென்றிருந்தேன்.

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காயிதெ மில்லத்தை பார்ப் பதற்கு நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்க ளும், தோழமைக் கட்சி களின் தலைவர்களும் பார்க்க வந்திருந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பெருந் தலைவர்களில் ஒருவரான சங்கைமிகு அப்துர் ரஹ்மான் ஃபாபகி தங்ங ளும் காயிதெ மில்லத்தை பார்க்க வந்தார். காயிதெ மில்லத் ஃபாபக்கி தங்ஙள் சில அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து ஓதச் சொன்னார்.

குர்ஆன் ஷரீப் சூராக் களை ஓதி வந்தேன். மரண நிலையில், சகராத் நிலையி லிருந்த காயிதெ மில் லத்தை நோக்கி வந்தேன். அப்போது காயிதெ மில்லத்தை பார்ப்பதற்கு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் வந்தி ருந்தார்.

காயிதெ மில்லத் கரத்தை பிடித்து கண்ணீர் வடித்து கலைஞர் அழுத காட்சியை கண்டு நாங்க ளெல்லாம் அழுதோம்.

சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அன்றைய கேரள கல்வி அமைச்சர் சி.எச். முஹம்மது கோயா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடி தலைவர்களும் உடனிருந்தார்கள். காயிதெ மில்லத் மறைவெய்திய நேரத்தில் அவர்களுடனிருந்து அவர் களுக்கு கஃபனிடும் போது நான் தலைப்பாகை கட்டி அணிவித்தேன். அந்த காட்சியை கண்ட காயிதெ மில்லத் மகன் மியாகான் லால்பேட்டை பட்ட மளிப்பு விழாவுக்கு தலைப் பாகை கட்டும் நிகழ்ச் சிக்கு காயிதெ மில்லத்தை அழைத்துச் செல்வீர்கள். இன்று நீங்கள் தலைப் பாகை கட்டினீர்கள் என்று கூறினார். இந்த காட்சி என் நெஞ்சை நெகிழ வைத்தது.

இன்று காயிதெ மில்லத் மண்ணறையில் காயிதெ மில்லத்துக்கு யாசீன் ஓதி துஆ செய்தபோது, தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினும், காயிதெ மில்லத் கட்டிக் காத்த முஸ்லிம் லீகை பாதுகாத்து வளர்த்து வரும் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அமைச் சர்களும், முஸ்லிம் லீக் முன்னோடிகளும், காயிதெ மில்லத்தின் கப்ரின் அருகில் இருந்து ஜியாரத் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டது எங்களின் நெஞ்சை நெகிழ வைத்தது.

காயிதெ மில்லத் கப்ரை அல்லாஹ் பிரகாச மாக்கி வைப்பானாக.

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினா லும் இஸ்லாமிய கலாச் சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர் களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது


முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான். அல்லாஹ{த்த ஆலா வின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.


இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத் தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விம். அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக் கப்பட்டது. வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமை யில் நடைபெற்ற கடுமையான போராட் டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய, தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத் தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந் தது.


இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டு மென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ் லானா காஸிம் நானோத் தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும். இஸ்லாமிய கலாச்சா ரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லா மியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.


ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலி ருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங் கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார் கள். அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.
இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண் மகனும் வருகை தந்து நாட் டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப்பின்பற்றி போதித்து வரும் அன் பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலி ருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.


இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா வுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத் தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும். புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸா வின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும். தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை யாறிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.


சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ் கிறார்கள். புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரி லும் வந்தது.


மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே வருக, ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக, ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக.
முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண் ணொளிகளே வருக வருக என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம.

பில்லூரில் மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார்


பில்லூரில் மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் பங்கேற்ப்பு
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார்

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர் விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.