இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Tuesday, January 26, 2010

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா
தளபதி ஷபிகுர்ரஹ்மான் பங்கேற்ப்பு!

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 61 வது குடியரசு தினவிழா 26.01.2010 அன்று சிறப்புடன் நடைபெற்றது

லால்பேட்டை பேரூராட்சி தலைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர் திலகம் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர்ரஹ்மான் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது

இந்தப் பள்ளியின் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோருடன் மாணவர்களின் அழகார்ந்த அணிவகுப்பில் அடியேனும் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டு நடந்து வந்தபோது 42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பள்ளியின் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்களுடன் என்.சி.சி.அணிவகுப்பில் தொண்டனாக நடந்து வந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்து பூரிப்படைகிறேன்
என் தாய் மொழியான தமிழ் மொழியை என் நாட்டின் ஆட்சி மொழியாக்குங்கள் என்று அரசியல் நிர்ணயசபையில் எடுத்துரைத்து தமிழ் மொழியின் பற்றை வெளிபடுத்தினார் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்கள் இந்தப் பள்ளியில் நடைப்பெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு வாழ்த்தியுள்ளர்கள் அவரின் வாழ்த்தால் இந்தப்பள்ளி இன்றும் சிறந்து இயங்குகிறது நம்முடைய இந்தியத்திருநாடு அறிவியல் துறையிலும் தொழில் துறையிலும் சிறந்து இயங்குகிறது பொருளாதாரத்தில் நல்ல மேன்பாடுகளை பெற்று வருகிறது சமீபத்தில் பெங்களுருவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமத் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பேசும்போது நம்முடைய இந்தியத்திருநாடு 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் பொருளாதாரத்திலும் சிறப்பு பெற்ற வல்லரசு நாடாக திகழப்போகிறது என்று குறிப்பிட்டதை இங்கே சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்திகொண்டிருக்கும் ஜனாப் சபியுல்லா மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளான ஏ.ஆர்.ரஷித் ,எம்.ஒ.அப்துல் அலி பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயதுல்லா ஆகியோரும் வருகைதந்திருந்தர்கள் அந்த மாநாட்டில் கல்வியின் அவசியம் பற்றி நம் தலைவர்கள் பேசியதை நினைவுப்படுத்துகிறேன் பள்ளியின் பணி வளம் பெற வாழ்த்துகிறேன் என தளபதி ஷபிகுர் ரஹ்மான் தனது உரையில் குறிப்பிட்டார் .ஆசிரியர் பாரி வரவேற்றார் துணை தலைமை ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார் பேரூராட்சி துணைத்தலைவர் ஹாஜா மைதின் ,தாஹா முகமத் மற்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1700 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

Saturday, January 9, 2010

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

 
தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.



பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!