இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Wednesday, March 31, 2010

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா ஏப்ரல் 2,3,ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது 02.04.2010. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் தலைமை வகிக்கிறார் ,பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்ப்புரையாற்றுகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றுகிறார் ,இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பலரின் நூலினை தமிழக அமைச்சர் உபையதுல்லா வெளியிட்டு உரையாற்றுகிறார் அதனை தொடர்ந்து

Saturday, March 27, 2010

புனித கஃபாவை நோக்கி ...!

புனித கஃபாவை நோக்கி ...!
தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான்
மாநில மார்க்க அணி செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்



உலகெங்கும் வாழும் ஒரு நூறு கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நாள்தோறும் எந்த புனித கஃபத்துல்லாஹ் ஷரீபை நோக்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுகிறார்களோ அநத புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றியும், புனித ஹஜ்ஜைப் பற்றியும் எழுதுவ திலும் பெரும் மகிழ்வடைகி றேன். அல்ஹம்துலில்லாஹ்...
புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றி நிறைய வரலாறுகளும், செய்தி களும் இருந்தாலும் வல்ல அல்லா ஹுத்தஆலா உலகை படைப் பதற்கு முன்னரே கஃபத்துல் லாஹ் ஷரீபை படைத்தான் என்றும், மலக்குமார்களால் கட்டப்பட்டது என்றும் சரி யான சரித்திரங்கள் சொல்லிக் காட்டு கிறது.
மூலப்பிதா - முதல் மனிதப் புனிதர் நபி ஆதம் அலை ஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்டது. அதன்பிறகு நபி நூஹ் (அலை) அவர்களாலும் கட்டப்பட்டது என்ற நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் தியாகச்சீலர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனிதமிகு கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப் பட்டது.
நபி இப்ராஹீம் கலீலுல் லாஹ் (அலை) அவர்களால் புனித கஃபத்துல்லாஹ் கட்டப்பட்ட செய்தியை திருக்குர்ஆன் ஷரீபின் மூலம் வல்ல அல்லாஹுத்த ஆலா நமக்கு தெரிவிக் கிறான்.
நபி இப்ராஹீம் (அலை) அவர் களாலும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களாலும் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப்பட்டு வல்ல அல்லா ஹுத்த ஆலா இடத்தில் யா அல்லாஹ் உன் கட்டளையை ஏற்று புனித கஃபத்துல்லாஹு ஷரீபை கட்டி பூர்த்தியாக்கி யுள்ளோம். இதை நீ, ஏற்றுக் கொள்வாயாக. அங்கீகரிப் பாயாக என பிரார்த்தித்துள் ளார்கள்.
வல்ல அல்லாஹுத்த ஆலா நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நோக்கி நீங்கள் ஹஜ்ஜுக்கு அழைப்பு கொடுங் கள் என்று கூறினான்.
அந்த அன்பான - தியாக மான அழைப்பை நோக்கித்தான் உலகெங் கும் வாழும் கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்தினர் புனித ஹஜ்ஜுக்காக புறப் படுகிறார்கள்.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வன் நிஃமத
லக்கவல் முல்க் லா ஷரீக்க லக்
எனும் உச்சாடனத்தை முழங்கி இறையச்சத்துடன் கஃபத் துல்லாஹ் ஷரீபை காணப் போகிறோம் என்ற ஆனந்தப் பெருக்குடன் புறப் படுகிறார்கள்.
புனித ஹஜ்ருல் நிய்யத் செய்தவர்களாக - புனித உம்ராவை நிய்யத் செய்தவர் களாக - இஹ்ராம் உடை அணிந்தவர்களாக வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது வணங்கி யவர்களாக புனித மக்கா நோக்கி புறப்படும் ஒவ்வொரு ஹாஜியிடமும் ஒரு வகையான இறையச்சத்தையும் தக்வா எனும் பரிசுத்த நிலை யையும் காண முடிகிறது.
புனித ஹஜ்ஜுக்காக இஹ்ராமை அணிந்து லப்பைக் எனும் உச்சாட னத்தை முழங்கி கஃபத்துல்லாஹ் ஷரீபை கண்ணால் பார்த்து மகிழ்ந்து, இரு கரமும் உயர்த்தி உள்ளத் தூய்மையுடன் உள்ளம் உருக துஆச் செய்து மகிழ்கிறோம்.
புனித ஹஜ்ருல் அஸ்வத் கல் முன்னே நமது கரம் உயர்த்தி துஆச் செய்து தவாஃபை துவக்குகிறோம்.
ஏழு சுற்று - புனித கஃபத் துல்லாஹ் ஷரீபை துஆச் செய்து மகிழ்கிறோம். தவாஃபின் 7 சுற்றும் பூர்த்தி பெற்ற பிறகு மகாமே இப்ராஹீம் முன்பே 2 ரகஅத் தொழுது துஆ செய்து மகிழ் கிறோம். புனித ஜம் ஜம் நீர் அருந்தி ஆனந்தம் அடை கிறோம்.
ஸஃபா மர்வா மலைக்குன் றுக்கிடையே ஸயீ செய் கிறோம். தொங்கோட்டம் ஓடுகிறோம். ஹஜ்ஜின் கேந்திரங்களான புனித மக்கா, புனித மினா, புனித அரஃபா, புனித முஜ்தலிபா இந்த இடங்களிலும் அமல் செய்து மகிழ்கிறோம்.
துல் ஹஜ்ஜு மாதம் பிறை 8, 9, 10, 11, 12, 13 இந்த புனித நாட்களில் புனித ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி ஒவ்வொரு ஹாஜியும் பூரிப் படைகிறார்கள். பிறை 8-வது நாளில் மினாவில் தங்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும், துஆ செய்வதிலும் ஈடு பட்டு பாவங்களை போக்கி பரிசுத்தம் அடைவதற்கு ஹாஜிகள் தயாராகிவிடுகிறார் கள்.
துல்ஹஜ் பிறை 9-வது நாளில் புனித அரஃபா பெருவெளியில் தங்கி வல்ல அல்லாஹுத்தஆலாவை தொழுது வணங்கி - அழுது அழுது - தான் செய்து விட்ட பாவங்களையும், குறைகளை யும் சொல்லி - சொல்லி அழுது அல்லாஹுத்த ஆலா இடத்தில் முறையிடுகிறார்கள். பிறை 9-வது நாள் லுஹர் தொழுகை நேரத் திலிருந்து இரவு வரை துஆ செய்து கொண்டிருக் கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை காணும் போதே கண்ணுக்கு குளிர்ச்சி யாகவும கல்புக்கு மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது.
புனித அரஃபாவிலிருந்து புறப் பட்டு இரவில் முஜ்தலி பாவில் தங்கி வல்ல அல்லாஹ்வை தொழுது துஆ செய்கிறோம்.
பிறை 10-வது நாள் காலையில் பஜ்ர் தொழுகை யினை நிறைவேற்றி மினாவுக்கு மீண்டும் திரும்புகிறோம். மினாவில் ஷைத்தானை கல்லெறிவதற்கு முஜ்தலிபா வில் பொறுக்கிய கல்லை 10-வது நாள் காலையில் ஜும்ரத்துல் அக்பா எனும் பெரிய ஷைத்தானுக்கு பிஸ் மில்லாஹ் அல்லாஹு அக்பர் என முழங்கி கல்லெறிகிறோம்.
குர்பானி கொடுத்து மொட்டை யடித்து அல்லது தலைமுடியை குறைத்துக் கொள்கிறோம். பெண்கள் தலைமுடியின் ஒரு சிறு பகுதியை குறைத்துக் கொள் வார்கள். குளித்து புத்தாடை அணிந்து ஆனந்த பெருக்குடன் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் சென்று தவாபு செய்து மகிழ் கிறார்கள்-ஸயீயை நிறைவேற் றுகிறார்கள்.
மீண்டும் மினாவுக்கு சென்று பிறை 11, 12, 13 வரை தங்கி மூன்று ஷைத்தான் களுக்கும் கல்லெறிகிறார்கள். மீண்டும் மினாவிலிருந்து மக்கா வந்து புனித மக்காவில் வாழும் கால மெல்லாம் தவாபு செய்து தொழுது வணங்குவார்கள்.
புனித ஹஜ்ஜு பூர்த்திப் பெற்று தாயகம் திரும்புகிறோம்.
வள்ளல் நபிகள் பெருமா னார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களிடத்தில் அருமை சஹாபாக்கள் புனித ஹஜ்ஜைப் பற்றி விளக்கங்கள் கேட் டார்கள். வினாக்கள் கேட்டார் கள்.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜைப் பற்றி கேட்ட சஹாபாக்களுக்கும் உலகம் முடிகின்ற வரையிலுள்ள கோடானு கோடி முஸ்லிம் களுக்கும் பதிலாக - விளக்க மாக உங்களின் ஹஜ்ஜில் என்னை பின் பற்றுங்கள்.
புனித ஹஜ்ஜின் கிரியை களில் நான் எப்படி செய்கிறேனோ அப்படி நீங்களும் செய்யுங்கள் என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
நம் அனைவரின் ஹஜ்ஜும் வள்ளல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர் களின் ஹஜ்ஜைப் போன்று புனிதம் பெற்றதாக திகழ கருணை யுள்ள ரஹ்மான் அருள்புரிவானாக.
உலகெங்குமிருந்தும் புனித ஹஜ்&க்காக வரும் லட்சக் கணக்கான ஹாஜிகள் ஹஜ் ஜுக்கு முன்போ அல்லது ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்போ மாண்புமிகு மதீனா வுக்கு சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பள்ளி யில் தொழுது-
வள்ளல் நபிகள் பெரு மானார் ரசூலே கறீம் அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லி சொல்லி மகிழ்வ டைவார்கள்.
நம் அனைவர்களுக்கும் புனித ஹஜ், புனித உம்ரா, பாக்கியங்களை அல்லாஹ் வழங்குவானாக.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்கள் தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழும் பாக்கியங்களை வழங்கி அருள்புரிவானாக.

Saturday, March 6, 2010

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழுச்சிமிகு வரவேற்ப்பு
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து

காட்டுமன்னார் கோயில் ,முட்டம் பாலம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் தளபதி
ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டைநகரில் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் ,கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் ,லால்பேட்டை நகர தலைவர் முகமத் ,பேரூராட்சி மன்றத்தலைவர் சபியுல்லா,நகர முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் அலி ,துணைத்தலைவர்கள் அப்துல் ஜெமில் ,தஹா முகமத் , அப்துல் ரசித்,துணை செயலாளர்கள் முகமத் தைய்யுப் ,ரஊப்,ஹிதயதுல்ல இளைஞர் அணி நூருல் அமின் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் சால்வை அணிவித்தனர்
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து
முஸ்லிம் லீக் மாணவர் அணியைச்சார்ந்த ஏ.எஸ்.அஹமத் தளபதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பென்னகரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள் என்ற செய்தியை தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறினார்

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகரெங்குமுல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,உலமாக்கள் ,ஜமாத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .தி.மு.க.மற்றும் தோழமை கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கான மக்களும் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் ,தளபதி ஸ்டாலின் ஜிந்தாபாத்,பேராசிரியர் காதர் மொகிதீன் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டு வரவேற்ற பொது துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்.