இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Monday, December 28, 2009

கண்ணியமிகு காயிதே மில்லத்

கண்ணியமிகு காயிதே மில்லத்




மௌலவி தளபதி ஏ.ஷஃபிகுர்ரஹ்மான்

தமிழ்நாடு மாநில மார்க்க அணிச்செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


தஞ்சை மாவட்டம் வழுத்தூர் எனும் எழுத்தூரில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்சி முகாமில் அடியேன் பங்கேற்திட இயலாவிட்டாலும். புனித ஹஜ்ஜை நிறைவேற்றிட வந்த அடியேன் புனித ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி புனிதமிகு கஃபத்துல்லாஹ் ஷரீபிலும் மாண்புமிகு மதீனா முனவ்வராவின் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்லா ஷரீபிலும் துஆச்செய்து இந்த வாசகத்தை எழுதி அனுப்பி இருக்கிறேன். பேச்சாளர் பயிற்சி முகாம் சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புனித ஸ்தாபனத்தை மேலும் வலிமைப்பெறச்செய்து பிரகாஸத்துடன் திகழ துஆச்செய்து வாழ்த்துகிறேன் அல்ஹம்து லில்லாஹ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தனிப்பெறும் தலைவராக திகழ்ந்த கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் பற்றி சொல்லிக்காட்டுவதிலும் சுட்டிக்காட்டுவதிலும் பெரும் மகிழ்வெய்துகிறேன்.
இளமை பருவம்
காயிதே மில்லத்அவர்கள் தனது இளமை பருவத்தில் திருநெல்வேலிபேட்டையில் பால்ய சங்கம் ஒன்றை நிருவி அதன் மூலம் சிறுவயதிலேயே மகத்தான சேவையாற்றியுள்ளார்கள்.கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலயே சுகந்திர போரட்டத்தில் பங்கேற்று தியாக மிகுந்த சேவையாற்றியுள்ளார்கள். கல்லூரிகளில் பட்டபடிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அன்னியர்களான வெள்ளையர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிரித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கல்லுரிகளை விட்டு வெளியேற வேண்டுமென்று காந்திஜீ அவர்கள் வேண்டு கோள்விட்டபோது கல்லுரி படிப்பை பாதியிலயே உதரி தள்ளிவிட்டு கல்லூரியை விட்டு காயிதேமில்லத் வெளியேரினார்கள் இது சரித்திர செய்தியாகும்.


அரசியலில்


முஸ்லிம் லீக்கின் சென்னை மாகானத் தலைவராக இருந்து மகத்தான பணியாற்றியுள்ளார்கள் தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து அரசு சரியாக செயல்பட அலோசனை வழங்கியுள்ளார்கள். அரசின் செயல்பாடுகளில் குறைபாடுகளை காணும்போது கடுமையாக எதிர்த்துள்ளார்கள். சென்னை மாகான சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றிய காயிதேமில்லத் அவர்களின் செயல்பாடுகளையும் அரிவார்ந்த அரசியல் ஆலோசனைகளையும், இன்றும் அரசியல் மேதைகள் பாராட்டுகிறார்கள்.


நாம் நாட்டு நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் அவர்கள் மிக அற்புதமாக செயல் பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்க்கு எதிராகவும், முஸ்லிம் தகுதி உயிரினும் மேலான ஷரீஅத்து சட்டத்தை எதிர்த்து சில நாடாளுமன்ற உறுப்பினார்கள் பேசியபோது அவர்களின் பேச்சை கடுமையாக எதிரித்துள்ளார்கள், எங்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தில் தலை இடாதீர்கள் எங்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்யாதீர்கள் என்று நாடாளமன்றத்தில் பேசியுள்ளார்கள்.
இரும்பு மனிதரையே எதிர்த்த ஈமானின் உறுதி மிக்க தலைவர்



நம்நாட்டின் நடாளுமன்றத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் சலுகைகளை கேட்கவில்லை. நம் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருஜீ அவர்களுக்கும் உள்துரை அமைச்சர் சர்தார் பட்டேல்ஜீ அவர்களுக்கும் எந்த உரிமை இருக்கிறதோ, அந்த உரிமை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமிற்க்கும் இருக்கிறது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று காயிதே மில்லத் சொல்லியுள்ளார்கள். நடாளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமையைப்பற்றி காயிதேமில்லத் பேசியபோது முஸ்லிம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்று இரும்பு மனிதரான பட்டேல்ஜீ அவர்கள் சொல்லியபோது இந்த நாட்டில் வாழும் ஒரு கொசுவைக்கூட வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட்ட வேண்டும் என்று சொல்லுவதர்க்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எந்த வகையிலும் எந்த நிலையிலும் முஸ்லிம்களாகிய எங்களை எங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் வெளியேர வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று இரும்பு மனிதரான பட்டேல்ஜீ அவர்களை பார்த்து நேருக்கு நேர் உறுதியுடன் எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தார் ஈமானின் உறுதியை காயிதேமில்லத் அவர்கள் நம் நாட்டு நாடளு மன்றத்தில் வெளிப்படுத்தினார். நம் நாட்டு அரசியல் நிர்ணயச்சபையில் என் தாய்மொழியான தமிழ்மொழியை நம் நாட்டு ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று அரசியல் நிர்ணயச்சபையிலயே முழங்கியவர்கள் காயிதேமில்லத் அவர்களாகும்.

முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாகராகவும் தமிழகத் தலைவராகவும் சிறப்புடன் செயல்பட்டு வரும் நம் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகதீன் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் என்னை டெல்லிக்கு அழைச்துச் சென்றிருத்தார்கள். அப்போது நாடாளுமன்றத்தின் வளாகத்தில் தலைவர் பேராசிரியர் தே.எம்.கே. அவர்களுடன் அடியேன் நடந்துச் சென்றபோது காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடந்த ஒவ்வொரு நாளும் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளைப்பற்றி பேசியுள்ளார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெயரை பதிவு செய்துள்ளார்கள். அதைப்போன்று முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களும் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப் அவர்களும் சிறப்பாக சேவையாற்றியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியுள்ள சேவை மிக மகத்தானதாகும் என்று தலைவர் பேராசிரியர் அவர்கள் சொன்னச் செய்தி என்னை நெகிழவைத்தது. கேரள மாநிலத்திலிருந்து 3 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பட்ட காயிதே மில்லத் அவர்கள் வியக்க தக்க சேவையாற்றியுள்ளார்கள். தொகுதிக்கே செல்லாமல் பல்லாயிரக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றிவாகைச் சூடிய காயிதே மில்லத் அவர்கள் அரசியல் உலகிலும் சமுதாய, சன்மார்க்க பணியிலும் தியாக மிகுந்த சேவையாற்றியுள்ளார்கள்.

இளைஞர்களிடம் காயிதே மில்லத் அன்பு


இளைஞராக இருந்த சிராஜீல் மில்லத் அப்துல்ஸ்ஸமத் சாஹிப் அவர்களை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கி அழகுப்பார்த்தவர்கள் 1967-1971 நடைப்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிப் பெறச்செய்தவர்கள் காயிதே மில்லத் அவர்களாகும்.



அதேபோல் இன்று தலைவர் பேராசியர் முனீருல் மில்லத் அவர்களும் இளைஞர்களை முன்னிலைப் படுத்தும் வகையில் அனைத்துலக காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஜனாப் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தாய்ச்சபை சார்பாக அனுப்பியுள்ளார்கள்.



1958 ம் ஆண்டு ஜீன் மாதம் 6, 7 தேதிகளில் லால்பேட்டை திப்பு சுல்தான் நகரில் காயிதே மில்லத் தலமையில் மாபெறும் மாநாடு நடைப்பெற்றது அப்போது 12 வயது சிறுவனாக இருந்த அடியேனும் என்வயதுடைய சிறுவர்களும் மாநாட்டின் தொண்டர்களாக பணியாற்றினோம் அந்த மாநாட்டில் எனக்கு மேடையில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தேனீர் கொடுப்பது விசிரிவிடுவது ”அப்போது எங்கள் ஊரில் சரியான மின்சாரம் கிடையாது அதனால் மேடையில் ஃபேன் போடவில்லை. அப்போது காயிதே மில்லத் அவர்களுக்கு விசிரிமட்டையை எடுத்து விசிரி விட சென்றேன். அப்போது என்ளை காயிதே மில்லத் அவர்கள் அன்புடன் அருகில் உட்காரவைத்து விசிரி மட்டையை என்னிடமிருந்து வாங்கி கொண்டார்கள்.



மேடைக்கு எதிறே வீற்றிருந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர் திலகங்களை சுட்டிக் காட்டி அவர்களே கடும் வெயிலையும் பொறுட்படுத்தாமல் நாள் முழுக்க மாநாட்டு பந்தலில் வீற்றிருக்கும் போது நாமும் அப்படியே இருப்போம் என்று காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியில் லால்பேட்டை நகரில் என் சிறு வயதுக்கு ஒத்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களெல்லாம் தென்னாற்க்காடு மாவட்ட முஸ்லீம் லீக் சிறுவர் மாநாட்டை மிகச் சிறப்புடன் நடத்தினோம். கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட தென்னாற்க்காடு மாவட்ட முஸ்லீம் லீக் மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது. அறிவுலக மேதை ஷைகுல் மில்லத், அமானி ஹஜ்ரத் அன்றைய லால்பேட்டை நகர முஸ்லீம் லீக் தலைவர் முத்தவல்லி அப்துல் பாசித் அன்றைய மாவட்ட கன்வினர் ஊழியர் திலகம் நெல்லிக்குப்பம், சயித் சாஹிப், மௌலவி முகமது இக்லில், டி.எம். அப்துல் ஹலிம் மௌலவி, எஸ்.ஏ. அப்துல் ஹக் ஆகியோரின் அற்புதமான வழிக்காட்டுதலில் மாநாட்டை மிகச்சிறப்புடன் நடத்தினோம்.



மாநாட்டை வாழ்த்தி சின்னஞ்சிறு வயதினரான எங்களை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும், காயிதே மில்லத் தபால் எழுதியிருந்தார்கள். இந்த மாநாடு முடிந்து இரண்டொரு மாதத்தில் நடைபெற்ற லால்பேட்டை ஜாமீஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த காயிதே மில்லத் அவர்கள் லால்பேட்டை நகர முஸ்லீம் லீக் தலைவராகவும் ஜாமீஆ மன்பவுல் அன்வார் நாஜிராகவும் பணியாற்றிய என் பாட்டனார் முத்தவல்லி மௌலவி அப்துல் பாசித் அவர்களிடத்தில் சொல்லி மாநாடு நடத்தியவர்களை வரச்சொல்லுங்கள் அடியேனும் பி.எம். முகமது தாவூஸ், டி.எஸ். முகமது அலி, எஸ்.என். அபுல் ஹசன், பி.இஜட். முஹமது மற்றும் சிறுவர்களும் சென்றோம். அப்போது காயிதே மில்லத் அருகில் அறிவுலக மேதை அல்லாமா அமானி ஹஜ்ரத் மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூசுப் சாஹிப் மற்றும் முஸ்லீம் லீக்கின் முன்னோடிகள் உடன் இருந்தனர். சிறுவர்களான எங்களின் தொன்டை பாராட்டி துஆ செய்தார்கள். அன்று மாலையில் லால்பேட்டை நகரில் நடைபெற்ற மாபெரும் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டத்தில் எங்களை அழைத்து காயிதே மில்லத் பேச வைத்தார்கள். காயிதே மில்லத் அவர்கள் பேசும் போது எங்களின் பேச்சை பாராட்டி பேசினார்கள். அதுதான் இன்றும் எங்களை முஸ்லீம் லீக்கில் தொன்டாற்ற வைத்துள்ளது.

சிறுவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்
1968ம் ஆண்டில் லால்பேட்டை புதுபஜாரில் மாபெரும் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டம் துவங்கும் முன்பே பன்னூற்றுக் கணக்கான சிறுவர்கள் மேடையின் எதிரே உட்கார்ந்திருந்தார்கள். காயிதே மில்லத் அவர்களும், சிராஜீல் மில்லத், அப்துஸ்ஸமத் சாஹிப் அரசியல் ஞானி பக்கர் அண்ணன் மற்றும் முன்னோடிகள் மேடைக்கு வந்ததும் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் கூடிவிட்டது. மேடைக்கு அருகே உட்கார்ந்திருந்த சிறுவர்களை ஊழியர்கள் அப்புரப்படுத்தினார்கள். சிறுவர்களை அப்புரப்படுத்தாதீர்கள் இந்த கூட்டத்திற்கு அவர்கள் தான் முதலில் வந்துள்ளார்கள்.



இங்கே பேசப்படும் பேச்சுக்கள் இந்த சிறுவர்களுக்கு புரியவில்லை என்றாலும் அல்லாஹ், ரசூல், முஸ்லீம், முஸ்லீம் லீக் வார்த்தை அவர்களின் காதுகலில் விழுந்து கல்பில் பதிந்தால் போதும் என்று காயிதே மில்லத் சொன்னார்கள்.


அல்லாஹீ அக்பர் கோஸத்தையே முழங்குங்கள்


புனித மிகு மஸ்ஜித் அக்ஸாவின் ஒரு பகுதியை யூதவெறியர்கள் இஸ்ரேல் காரர்கள் தீயிட்டு கொளுத்திய போது இஸ்ரேலை கண்டித்து நாடெங்கும் முஸ்லீம் லீக் சார்பில் கண்டன கூட்டங்கள் நடைபெற்றது. காயிதே மில்லத் அவர்களே தலைமை ஏற்று நடத்தினார்கள். அப்போது சிதம்பரம் நகரில் மாபெறும் கண்டன கூட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் நாங்கள் எல்லாம் மஸ்ஜித் அக்ஸாவை தீயிட்டு கொலுத்திய இஸ்ரேல் ஒழிக அவர்களை ஆதரிக்கும் அமெரிக்கா ஒழிக என்று நாங்கள் கோஷமிட்டபோது யாரையும் ஒழிக என்று கோஷம் போடாதீர்கள்.



அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என தக்பீர் முழங்குங்கள். அல்லாஹூ அக்பர் தக்பீர் முழங்குவதால் நமக்கு எதிரான சக்திகள் தானாக ஒழிந்துவிடும் என்று காயிதே மில்லத் சொன்னது இன்னும் எங்கள் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

புனித ஹஜ்ஜில் காயிதே மில்லத்


புனித ஹஜ்ஜீக்கு சென்றிருந்த காயிதே மில்லத் அவர்கள் புனித ஹஜ்ஜீல் புனித மக்காவிலும் மாண்புமிகு மதினாவிலும் காயிதே மில்லத் செய்த நல் அமல்கள்அவர்களின் பணிவான அன்பார்ந்த செயல்பாடுகளை பற்றி இன்றும் எல்லோரும் நினைவுக் கூறுகிறார்கள்.



காயிதே மில்லத் அவர்களுடன் ஹஜ்ஜீக்கு சென்றிருந்தவர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர்களில் ஒருவரான காயல் பட்டனம் மாநகர் பெற்றிருந்த அப்துல் ஹலிம் ஹாஜியார் அவர்களும் ஒருவர். புனித ஹஜ்ஜீக்கு வருகை தரும் தலைவர்களை அழைத்து சவூதி அரபியாவின் மன்னர்கள் விருந்து கொடுப்பது மரபாக இருந்து வருகிறது.



உலக தலைவர்கள் பங்கேற்ற அந்த மாநாட்டில் இந்திய நாட்டின் பெருமைகளை பெரிதும் பாராட்டி பேசினார்கள். இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஒரு பேரியக்கத்தை நடத்தி வருகிறீர்களே என ஆச்சிரியத்துடன் பல நாட்டின் தலைவர்களும் வியந்து பாராட்டி பேசினார்கள்.

மரண நிலையில் ஈமானின் உறுதி


காயிதே மில்லத் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது காயிதே மில்லத் அவர்களுடன் மருத்தவ மனையில் முஸ்லிம் லீக் முன்னோடிகளும் உடனிருந்தார்கள். அப்போது கேரளத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களான ஷங்கைமிகு செய்யிதுனா அப்தூர் ரஹ்மான் பாஃபக்கி தங்கள், பூக்கோயா தங்கள் சமீபத்தில் மறைந்த ஆன்மீக மேதை ஷங்கைமிகு சிஹாப் தங்கள் அவர்களின் அன்பு தந்தை ஆகியோரும் உடனிருந்தார்கள். அப்போது காயிதே மில்லத் அவர்களை பார்த்து பாஃபக்கி தங்கள்அவர்களும், பூக்கோயா தங்கள்அவர்களும் இஸ்மாயில் சாஹிப் என்று பலமுறை அழைத்தார்கள். எந்த பதிலும் இல்லை சகராத் நடைப்பெறுகிறது மரண தருவாயில் இருக்கிறார்கள் எனக்கூறி என்னிடத்தில் அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து இதை காயிதேமில்லத் நெஞ்சில் ஓதி வாருங்கள் என்றார்கள். அதன்படி அடியேன் ஓதிவந்தேன். காயிதே மில்லத் அருகில் சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமது சாஹிப் காயிதே மில்லத்தின் மகனார் ஜே.எம். மியாகான் சாஹிப் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அன்றைய பொது செயலாளர் ஏ.கே. ரிஃபாய் சாஹிப் முஸ்லிம் லீக் முன்னோடிகளான வடகரை பக்கர் அண்ணன் இன்றைய மாநில துணைத்தலைவர் எஸ். கோதர் மைதீன் சாஹிப் மற்றும் முன்னோடிகளும் உடனிருந்தனர். காயிதே மில்லேத் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி தெரிந்து நாடெங்கும் உள்ள முஸ்லிம் லீக் தலைவர்கள் அரசியல் மேதைகளும், தலைவர்களும் காயிதே மில்லத் அவர்களை காண அலை அலையாய் வந்திருந்தார்கள். பெரிய குளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களும் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து விட்டு ஓடோடிவந்து காயிதே மில்லத் அவர்களை பார்த்து கதறி அழுது கண்ணீர் வடித்த காட்சி இன்னும் மறக்க முடியவில்லை.

கேரளத்தின் முதல்வராக பணியாற்றிய கேரள சிங்கம் சி.எச். முகமது கோயா முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் மஹ்பூபே மில்லத் சுலைமான் சேட் சாஹிப் தமிழக ஆளுனர் மற்றம் அமைச்சர்கள், தந்தை பெரியார் ஆகியோரும் காயிதே மில்லத் அவர்களை பார்த்து கண் கலங்கினார்கள். ஸ்டான்லி மருத்துவமனையில் மறைவெய்திய காயிதே மில்லத் உடல் குரோம் பேட்டை தயாமன்ஜிலில் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை புது கல்லூரியில் பார்வைக்காக வைக்கப்பட்டது. சரித்திர பிரசித்தி பெற்ற வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்றும் காயிதே மில்லத் கப்ரில் (நினைவிடத்தில்) சமுதாய மக்களும், அரசியல் தலைவர்களும் ஜியாரத் செய்து வருகிறார்கள்.
முஸ்லிம் லீக்கின் வெற்றிபிரகாசம்

காயிதே மில்லத் மறைவுக்குப்பிறகு காதிமுல் மில்லத் அப்துல் வஹாப் ஜானி சாஹிப் சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் ஆகியோரும் சிறப்புடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கதை சிறப்புடன் நடத்திவந்தார்கள். இந்த தலைவர்களெல்லாம் காட்டிய வழியில் கெட்டுப்போகாமலும் பட்டுபோகாமலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளராகவும் தமிழக தலைவராகவும் இருந்து நம்முடையத் தலைவர் தியாகச்செம்மல் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்புடன் நடத்தி வருகிறார்கள்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான இ. அஹ்மத் சாஹிப் அவர்களும் மிகச் சிறப்புடன் பணியாற்றி வருகிறார்கள். முஸ்லிம் லீக் புனித இயக்கம் நாடு முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.



(இன்று வழுத்தூரில் துவங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சாளர் பயிற்ச்சி முகாமில் மாநில தொண்டரணி அமைப்பாளர் திருச்சி ஜி.எம்.ஹாஷிம் அவர்கள் இந்த உறையை வாசித்தார்கள்)

Tuesday, December 15, 2009

இஸ்லாமியத் தலைவர்கள் -மார்க்க அறிஞர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்

இஸ்லாமியத் தலைவர்கள் -மார்க்க அறிஞர்களின்



தமிழ் வளர்ச்சிப் பணிகள்

மெளலானா தளபதி. A.­ஷஃபீகுர் ரஹ்மான், மன்பஈ.

(மாநில செயலாளர். தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,சென்னை)
சென்னையில் 13.12.2009 அன்று நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 2 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவை : பக்கம் -173
சந்தனத் தமிழில் திருக்குர் ஆனின் விரிவுரை, வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அறிவார்ந்த வாழ்வியல் முறைகளைப் பற்றி நமது தலைவர்களும் உலமாக்களும் நமக்கு இனிமையாகக் கூரியது மட்டுமல்லாமல் அரபுலகத் தலைவர்களையும் தமிழ் பேச வைத்த சிறப்பு நமது தலைவர்களுக்கு உண்டு .இந்தச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும் .
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்

தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினராகவும்,

பணியாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் னி.இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
மொழி வளமும், வரலாறும் படைத்த என் தாய்மொழியான தமிழ்மொழியை இந்திய நாட்டின்

ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சபையில் எடுத்துரைத்த

காயிதே மில்லத் அவர்கள் உலக மன்றத்திலும், மக்கள் இடத்திலும், தமிழ்மொழியின் இனிமையைப்

பற்றி அருமையாக சொல்லிக் காட்டியுள்ளார்கள். மொரோக்கோவின் தலைநகர் ராபத்தில் நடைப்பெற அனைத்துலக முஸ்லிம் கல்வி மாநாட்டில் நமது இந்திய அரசின் பிரதிநிதியாக முஸ்லிம் கல்வியாளர்களின்

பிரதிநிதியாக சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பங்கேற்றிட சென்றிருந்தார். அப்துஸ்

ஸமத் சாஹிப் அவர்களிடத்தில் காயிதே மில்லத் அவர்கள் ஸிம்து சுப்பான், ஃபத்ஹுர்ரப்பானி, தப்ஸீருல்

குர்ஆன், மிஸ்காத்துல் மஸாபீஹ் ஆகிய அரபுத் தமிழ் கிதாப்களை (புத்தகங்களை) அப்துஸ் ஸமத் சாஹிப்

அவர்களிடம் கொடுத்து மொரோக்கோ கல்வி மாநாட்டின் அரங்கில் பார்வையாளர் பகுதியில் வைக்கச்

செய்யுங்கள் என்று கொடுத்தனுப்பினார்கள். இதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் மாநாட்டின் பார்வையாளர்கள் பகுதியில் இடம்பெறச்செய்தார்கள். மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த

அரபுலக தலைவர்கள் அரபுத் தமிழ் கிதாப்களை வாசித்தப்போது அரபுலக தலைவர்களின் நாவிலிருந்து

உதட்டிலிருந்து இனிய

தமிழின் இன்பத் தமிழ்வார்த்தைகள் வெளியானதைப் பற்றி அரபுலக தலைவர்கள் தமிழ் பேசியதுப் பற்றி மணிவிளக்கு மாதஇதழில் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் எழுதி எல்லோரையும் மகிழ்வடையச் செய்தார்.
அன்றைய காலகட்டத்தில் சென்னை புதுக் கல்லூரி தலைவராகவும், சென்னை மாவட்ட இந்திய யூனியன்

முஸ்லிம் லீக் தலைவராகவும், அப்துஸ் ஸமத் சாஹிப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரபுலக தலைவர்களை தமிழ் பேச வைத்த படிக்க வைத்த காயிதே மில்லத் அவர்களின் சேவை மகத்தானதாகும்

என்பதை எண்ணி மகிழ்வடைகிறோம். மொரோக்கோ முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டில் இடம்பெறுவதற்காக காயிதே மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களிடம் அரபுத் தமிழ் கிதாப்களை கொடுத்த போது

அடியேனும் இருந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.

அல்லாமா அமானி ஹஜ்ரத்

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வராகவும் தமிழ்நாடு மாநில்

ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும், நீண்ட காலங்கள் பணியாற்றிய அறிவுலக மேதை அல்லாமா ஜியாவுத்தின் அஹமத் அமானி ஹஜ்ரத் தமிழ், அரபு, ஃபார்ஸி, உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும்

நல்லப் பாண்டித்துவம் பெற்றவராக திகழ்ந்தார். குல்ஜாரே ஃபாத்திமா என்ற பெயரில் அரபுத் தமிழிலும் ஃபாத்திமா நாயகியின் ஜீவசரித்திரம் என்ற பெயரில் இனிய தமிழிலும் இருநூல்கள் எழுதி வெளியிட்டுயிருக்கிறார்கள். இந்த இருநூல்களும் சமுதாய மக்களிடத்தில் நல்ல

வரவேற்பை பெற்றிருந்தது. உருதுவிலும், ஃபார்ஸியிலும் நூல்கள் எழுதியுள்ள இவர் ஃபார்ஸி மொழியில் எழுச்சியூட்டும் கவிதைகளும் உள்ளார். குல்­னே சீரத் என்ற பெயரில் உருதுவில் நபிகள் பெருமானார் (ஸல்..)

அவர்களைப் பற்றி கவிதையாகப் பாடியுள்ளார். காலம் காட்டு இடைநிலை என்ற பெயரில் 1956ஆம் ஆண்டில் இவர் எழுதிய தமிழின் சிறப்பு பற்றிய நூல் தமிழறிஞர்களின் பாராட்டுதலையும், வாழ்த்தையும் பெற்றது. 1958ஆம் ஆண்டிலிருந்து 1966ஆம் ஆண்டு வரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்

தமிழ்துறையின் தலைவர்களும், பேராசிரியர்களும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்

கல்லூரிக்கு வந்திருந்து அமானி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து தமிழ்மொழியின் மீது அவர் கொண்டுள்ள பற்று, பாசம் வரலாற்று செய்திகளையும் தமிழ்மொழிப் பற்றிய ஆய்வுகளையும் கண்டு ஹஜ்ரத் அவர்களின்

திறமையை பெரிதும் பாராட்டிச் சென்றுள்ளார்கள். மதராசாவில் எங்களுக்கு பாடங்கள் நடத்திய காலங்களிலும் அரபி, உருது, ஃபார்ஸி நூல்களிலுருந்து தமிழில் மொழிபெயர்த்து சொல்லி தமிழின் இனிமைகளைப் பற்றி

எங்களுக்கு போதிப்பார்கள்.

மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ

லால்பேட்டை மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ இவர் 1895 ஆம் ஆண்டிலிருந்து 1917ஆம்

ஆண்டு வரை புனித மிகு மக்காவிலுள்ள மத்ரஸா ஃபக்ரிய்யா உஸ்மானிய்யாவில் பேராசிரியாராகப்

பணியாற்றியுள்ளார்கள். அன்றைய காலக்கட்டத்தில் புனித ஹஜ்ஜுக்கா தமிழகத்திலிருந்தும் இலங்கை, பர்மா ஆகிய பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு மத்தியில் புனித ஹரம் ­ரீபில் வைத்து தமிழில் ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத், திருக்குர் ஆனின் சிறப்பு அதன் விளக்கம் பற்றியும் நபிகள் பெருமானார்

அவர்களின் அழகிய வாழ்வியல் பற்றியும் தமிழில் உரையாற்றியுள்ளார்கள். இவர்களின் எழுச்சி மிகு இனிய

தமிழ் உரையின் நடையினை அரபுகளும் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள். அரபுகளையும் தமிழ் பேச

வைத்துள்ளார்கள் என்ற இனியத் தகவலை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். இவர்கள் என் பாட்டனார் என்பதையும் தெரிவிப்பதில் பூரிப்படைகிறேன்.

இஸ்லாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் ஏராளம் இக்கட்டுரை அது குறித்த சில விசயங்களை கோடிட்டுக் கட்டுகிறது .இதுபோன்று இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது இஸ்லாத்திற்கும், இன்பத்தமிழ் மொழிக்கும் இடையிலான உறவை முன்னெடுத்து செல்வதாக அமையும்.

Sunday, November 8, 2009

.அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.
தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.
அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.
முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.
முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
-

Saturday, November 7, 2009

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்



கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் அக்டோபர் 18 ஞாயிற் றுக்கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர்.

லால்பேட்டை சிதம் பரம் மெயின் ரோட்டில் சிராஜுல் மில்லத் நினை வரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.ஜி. முஹம்மது தலைமை தாங்கினார். இளைஞரணி துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார். கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ. அமானுல்லா வரவேற்று பேசினார்.

மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கபார் துவக்கவுரை நிகழ்த்தினார். நகர ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள், முத்தவல்லி கள் முன்னிலை வகித்தனர். மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத் ஜான், மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், திருவாரூர் மாவட் டச் செயலாளர் எம்.எம். ஜலாலுதீன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

லால்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் சல்மான் பாரிஸ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பிரைமரி களின் நிர்வாகிகள், இளை ஞர் அணியினர், ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள் ஏராளமானோர் பங்கேற்ற னர்.

உலமாக்கள் சந்திப்பு
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ், மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹஸரத், கட லூர் மாவட்ட ஜமாஅத் துல் உலமா சபை தலைவ ரும், லால்பேட்டை ஜே. எம்.ஏ. அரபிக் கல்லூரி முதல்வருமான மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹஸரத், நெல்லிக்குப்பம் மவ்லானா அப்துல் ரஸாக், மலேசிய பினாங்கு மதரஸாவின் பேராசிரியர் மவ்லானா ஹம்மாது மதனி, மவ் லானா சையத் அஹமது, மவ்லானா நூருல் அமீன், மவ்லானா அபுல் கலாம் உள்ளிட்ட உலமா பெரு மக்களை மாநில பொதுச் செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பி னரும் சந்தித்து பேசினர்.

கொடியேற்று விழா
லால்பேட்டை நகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் அருகிலும், புது பஜார், காயிதெ மில்லத் சாலை, ஏரிக்கரை மெயின் ரோடு, பஸ் நிலையம் அருகில், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபு பக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஏ.ஆர். அப்துர் ரஷீத் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செய லாளர்கள் லால்பேட்டை அமானுல்லா, விருத்தா சலம் லியாகத் அலி, நெல் லிக்குப்பம் ராஜா ரஹி முல்லா, மங்களம் பேட்டை அப்துல் ரஹ் மான், லால்பேட்டை நகர துணைத் தலைவர் எம்.ஓ. அப்துல் அலி, பி.எம். முஹம்மது தயீப், பி.எம். மஸ்ஊது, காட்டுமன்னார் குடி முஹம்மது கவுஸ், விருத்தாசலம் அப்துல் மஜீத் உள்ளிட்ட ஏராமா னோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இமாம் கஸ்ஸாலி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
லால்பேட்டை வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந் நகரில் உள்ள இமாம் கஸ்ஸாலி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

லால்பேட்டை லால் கான் தோப்பு கல்வி வளா கத்தில் ஏ.ஆர். பஸ{லுத்தீன் நினைவரங்கில் நடை பெற்ற இவ் விழாவிற்கு நகர முஸ்லிம் பட்டதாரி கள் சங்கத்தின் தலைவர் எஸ். எஸ். ஜாபர் அலி தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் ஹாரிஸ் அஹமது ஆண்டறிக்கை வாசித்தார்.

மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், கவிஞர் பி.எம். நசீர் அஹமது, எம்.ஏ. ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.எ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகி யோர் சிறப்புரையாற்றி னர். பள்ளி முதல்வர் மாரியப் பன் நன்றி கூறினார்.

மாவட்ட முஸ்லிம் லீக் கலந்துரையாடல்
லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் கடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் கூட் டம் முடிந்த பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எச். முஹம்மது ஆஸிப் இல் லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை ஜே.எம்.ஏ. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஏ. அப் துல் அஹது இல்லத்திற்கு சென்று காலம் சென்ற அவரது மாமியாரின் மஃபி ரத்துக்கு துஆ செய்தனர்.

முன்னதாக, லால் பேட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துல் ரஹ் மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் ஆகியோருக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


காயிதெ மில்லத் நினைவிடத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உருக்கம்



இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத்துடன் என்னுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்தே தொண்ட னாக பணியாற்றி இருக்கி றேன். காயிதெ மில்லத்தால் ஹதளபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டேன்.

காயிதெ மில்லத் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, லால் பேட்டை நகர முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் தா. அப்துல் ஹலீமுடன் காயிதெ மில்லத்தை பார்க்க சென்றிருந்தேன்.

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காயிதெ மில்லத்தை பார்ப் பதற்கு நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்க ளும், தோழமைக் கட்சி களின் தலைவர்களும் பார்க்க வந்திருந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பெருந் தலைவர்களில் ஒருவரான சங்கைமிகு அப்துர் ரஹ்மான் ஃபாபகி தங்ங ளும் காயிதெ மில்லத்தை பார்க்க வந்தார். காயிதெ மில்லத் ஃபாபக்கி தங்ஙள் சில அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து ஓதச் சொன்னார்.

குர்ஆன் ஷரீப் சூராக் களை ஓதி வந்தேன். மரண நிலையில், சகராத் நிலையி லிருந்த காயிதெ மில் லத்தை நோக்கி வந்தேன். அப்போது காயிதெ மில்லத்தை பார்ப்பதற்கு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் வந்தி ருந்தார்.

காயிதெ மில்லத் கரத்தை பிடித்து கண்ணீர் வடித்து கலைஞர் அழுத காட்சியை கண்டு நாங்க ளெல்லாம் அழுதோம்.

சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அன்றைய கேரள கல்வி அமைச்சர் சி.எச். முஹம்மது கோயா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடி தலைவர்களும் உடனிருந்தார்கள். காயிதெ மில்லத் மறைவெய்திய நேரத்தில் அவர்களுடனிருந்து அவர் களுக்கு கஃபனிடும் போது நான் தலைப்பாகை கட்டி அணிவித்தேன். அந்த காட்சியை கண்ட காயிதெ மில்லத் மகன் மியாகான் லால்பேட்டை பட்ட மளிப்பு விழாவுக்கு தலைப் பாகை கட்டும் நிகழ்ச் சிக்கு காயிதெ மில்லத்தை அழைத்துச் செல்வீர்கள். இன்று நீங்கள் தலைப் பாகை கட்டினீர்கள் என்று கூறினார். இந்த காட்சி என் நெஞ்சை நெகிழ வைத்தது.

இன்று காயிதெ மில்லத் மண்ணறையில் காயிதெ மில்லத்துக்கு யாசீன் ஓதி துஆ செய்தபோது, தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினும், காயிதெ மில்லத் கட்டிக் காத்த முஸ்லிம் லீகை பாதுகாத்து வளர்த்து வரும் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அமைச் சர்களும், முஸ்லிம் லீக் முன்னோடிகளும், காயிதெ மில்லத்தின் கப்ரின் அருகில் இருந்து ஜியாரத் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டது எங்களின் நெஞ்சை நெகிழ வைத்தது.

காயிதெ மில்லத் கப்ரை அல்லாஹ் பிரகாச மாக்கி வைப்பானாக.

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினா லும் இஸ்லாமிய கலாச் சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர் களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது


முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான். அல்லாஹ{த்த ஆலா வின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.


இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத் தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விம். அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக் கப்பட்டது. வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமை யில் நடைபெற்ற கடுமையான போராட் டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய, தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத் தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந் தது.


இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டு மென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ் லானா காஸிம் நானோத் தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும். இஸ்லாமிய கலாச்சா ரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லா மியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.


ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலி ருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங் கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார் கள். அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.
இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண் மகனும் வருகை தந்து நாட் டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப்பின்பற்றி போதித்து வரும் அன் பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலி ருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.


இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா வுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத் தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும். புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸா வின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும். தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை யாறிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.


சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ் கிறார்கள். புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரி லும் வந்தது.


மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே வருக, ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக, ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக.
முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண் ணொளிகளே வருக வருக என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம.

பில்லூரில் மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார்


பில்லூரில் மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் பங்கேற்ப்பு
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார்

மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர் விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.