இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Sunday, January 29, 2012

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் மீலாத் விழாக்களில் பங்கேற்று சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் சென்ற முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர்ரஹ்மான் மன்பஈ 
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் மாபெரும் ஷரிஅத் போராட்ட மாவிரராகும் 
நாமெல்லாம் புனித மஸ்ஜித்களிலும் சமுதாய மேடைகளிலும் வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அழகார்ந்த அன்பார்ந்த தூய்மையான வாழ்வைப்பற்றி வாய் இனிக்க பேசி மகிழ்கிறோம் 
நம்முடையத் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்கள் பற்றியும் புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டங்களின் மகத்துவம் பற்றியும் மஸ்ஜித்களிலும்,மதரஸாக்களிலும் , சமுதாய மேடைகளிலும் சிறப்புரையாற்றியதோடு 
மாராட்டிய மாநில சட்டமன்றத்திலும் ,நாடாளுமன்ற மக்களவையிலும்  புனித இஸ்லாமிய  ஷரிஅத் சட்டம் பற்றியும் மணி மணியாய் மணிக்கணக்கில் நம் நாட்டின் பிரதமர்,மத்திய அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுமே வியக்க தக்க அளவில் இஸ்லாமிய சட்டவியல் பற்றி உரையாற்றியுள்ளார் 
ஷாபானு வழக்கு பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் ஷரிஅத் சட்டம் மனித சமுதாயத்துக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு உரிமைப் பற்றியும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கு  இஸ்லாமிய  ஷரிஅத் வழங்கியுள்ள உரிமைப்பற்றியும், சிறப்புப்பற்றியும் உலக சமுதாயத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார் .
நம் உயிரினும் மேலான உத்தமத்தலைவர் நபிகள் பெருமானார் அவர்களின் அழகிய வழிகாட்டுதலால் மனித சமுதாயத்துக்கும் குறிப்பாக பெண்கள் சமுதாயத்துக்கும் கிடைத்துள்ள சிறப்புப்பற்றி நாடாளுமன்றத்தில் 4 மணி நேரத்துக்கும் மேலாக விளக்கவுரை - தெளிவுரை நிகழ்த்தியதை நம் நாட்டு பிரதமர் மறைந்த மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்த செய்தி சரித்திரச்செய்தியாகும் இதை தமிழகத்தின் மேடைகள் எங்கும் நம் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் சொல்லிக்காட்டியச் செய்தி மறக்க முடியாத நிகழ்வாகும் .
2004 ஆம்  ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நம் தலைவர் முனிருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்களுடன் அடியேனும்  நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தில்  பனாத்வாலா சாஹிப் அவர்கள் எம்.பி.யாக பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற  கூட்டம் நடைப்பெற்ற காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றியும் , ஷரிஅத் பற்றி - வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்வியல் பற்றி  நாடாளுமன்றத்தில் பேசியுள்ளச் செய்தியை நெஞ்சுருக குறிப்பிட்டார்கள் .
நாடாளுமன்றம் கூடியக் காலமெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பதிவுச் செய்துள்ள பனாத்வாலா சாஹிப் அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டினார் .
2008  ஆம் ஆண்டில் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் ரப்பிவுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஒவ்வொரு நாளும் வள்ளல் நபிகள் நாயகம் பெருமானார் அவர்களின் பிறந்த தின விழாவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் செய்யத் முஹமத் ஹாஜியார் நடத்திக் கொண்டிருந்தார் விழாவின் துவக்க நாளன்று தலைவர் பேராசிரியர் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்று துவக்கவுரையற்றிய முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களின் உரை இன்றும் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது .
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடுகள் ,பொதுக் கூட்டங்கள் ,பள்ளிவாசல் திறப்பு விழாக்கள்  ஷரிஅத் மாநாடுகள் ,அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாக்கள் ஆகியவற்றில் அதிகமாக பங்கேற்றுள்ளார் .திருச்சி மாநகரில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட  மீலாத் விழா மாநாடு ,ஊர்வலத்தில் பங்கேற்று உரையாற்றி சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்துள்ளார் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் ,சேலம் மாநகரிலும்  மீலாத் விழாக்களில் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தி சமுதாயத்தை சரியான பாதையில் எழுச்சி பெறச் செய்துள்ளார் .கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் .நகர  முஸ்லிம் லீக் சார்பில் அன்னை கதீஜா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற மீலாத் விழாவில் கலந்துக்கொண்டு வள்ளல் நபியின் தூய்மையான வாழ்வில் அற்புத சேவையாற்றியுள்ள அன்னை கதீஜா நாயகி அவர்களின் பெயரைப்பெற்றுள்ள மகளிர் பள்ளியின் வளாகத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்வடைகிறேன் என்று  பனாத்வாலா  சாஹிப் நிகழ்த்திய உரை அனைவரையும்  நெகிழ வைத்தது 
ஆசிக்கே ரசூல் பனாத்வாலா சாஹிப் அவர்கள் .
அடியேன் மாண்புமிகு மதீனாவில் பணியாற்றிய காலத்தில் மும்பை வழியாக அடியேன் பயணம் செல்லும் காலமெல்லாம் மும்பையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்று பயணம் சொல்லி போகும் போதெல்லாம் நபிகள் பெருமானார் ரசூல்(ஸல்) அவர்களின் தர்பாரில் என் ஸலாம் சொல்லுங்கள் என்று ஸலாம் சொல்லி சலவாத்து ஓதி மகிழ்வார் அதை நினைக்கும் போதெல்லாம் இன்னமும் எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன் .
இவரின் சேவையை அங்கீகரித்து கப்ரில் பிரகாசத்தை வழங்கி சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை கருணையுள்ள ரஹ்மான் வழங்குவானாக !

No comments:

Post a Comment